இந்தியா – பாகிஸ்தான் இடையே 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா - போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அதிரடியாக அறிவித்துள்ளது.
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. 1971ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரை நிறுத்தும் வகையில் 1972ல் சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது.