வேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிய புதிய கெமராக்களைப் பயன்படுத்த பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்த சாதனங்களில் இரட்டை கெமராக்கள் மற்றும் இரவு நேரத்திலும் தெளிவாகப் பார்வை யிடும் தொழில்நுட்பம் கொண்ட வசதிகள் இருக்கின்றன.
சாரதியின் புகைப்படம், வாகன எண் மற்றும் வேகத்தை நிகழ்நேரத்தில் படம்பிடிக்கும் திறன் கொண்டதாக இந்த சாதனங்கள் அமைந்துள்ளன. வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் விபத்துகளைக் குறைப்பதற்காகவும் பொலி ஸாரினால் இந்த வேகக் கெமராக்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த சாதனங்கள், இரவில் மாத்திரம் 1.2 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து வாகனங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன. இதில் பதிவுசெய்யப்பட்ட காணொளிக் காட்சிகள் நீதிமன்றத்தில் ஆதாரமாகச் செயற்படும் என்ப துடன், இதனால் பொலிஸார் போக்குவரத்து மீறல்களுக்கான தெளிவான ஆதாரங்களை முன்வைக்க முடியும்.
நாடு முழுவதும் இந்த சாதனங்களில் 30ஐ பொலிஸார் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு சாதனமும் 3.3 மில்லியன் ரூபா பெறுமதியானவை. கூடுதலாக 15 அலகுகள் உத்தரவிடப்பட்டுள்ளன.
இது 45 பொலிஸ் பிரிவுகளுக்குள் பயன்படுத்தப் படவுள்ளன. அதனூடாக போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸார் எதிர்பார்த் துள்ளனர்.