இஸ்ரேல் கட்டுப்பாட்டு ஜெரூஸலம் பகுதியில் பயங்கர காட்டுத் தீ பரவி வரும் நிலையில் இதுவரை 9 நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், சர்வதேச நாடுகளில் உதவியை கோரியுள்ளது இஸ்ரேல்.
இந்நிலையில் பரவி வரும் பயங்கர காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் பலஸ்தீன அதிகார சபையின் தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் பலஸ்தீனம் மீது தொடர்ந்தும் 572வது நாளாக பயங்கர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பலஸ்தீன தீயணைப்பு வீரர்கள் இஸ்ரேலுக்கு உதவ முன்வந்திருப்பது சர்வதேச கவனம் ஈர்த்துள்ளது.