எதிர்வரும் 26 ஆம் திகதி திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்வுள்ளார்..
உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வெற்றி நமதே ஊர் ஏமதே எனும் தொனிப் பொருளில் தேசிய மக்கள் சக்தி தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா சிங்கள பிரதேச சபை என்பவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா நகரசபை மைதானத்தில் 26 ஆம் திகதி தெற்கு தெற்கு சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் கூட்டத்திற்கே ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.