Our Feeds


Monday, April 21, 2025

ShortNews

ஜனாஸா எரிப்பின் போது நாங்கள் மாத்திரம் தான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினோம்! - சஜித்

 

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கிய அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளையும், கொள்கைகளையும் இன்று முழுப் பொய்யாக மாற்றியுள்ளது. நாட்டு மக்கள் தற்போது மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருவதுடன் பொருட்களின் விலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன.



 மின்கட்டணத்தை 33% குறைப்போம் என்று இந்த ஆளும் தரப்பினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறினர். மக்கள் எழுப்பிய குரலால் தான் 20% கூட மின்கட்டணம் கூட குறைக்கப்பட்டன.

 

 அரசாங்கம் தீர்மானம் எடுத்து இதனை நிறைவேற்றவில்லை. மக்களின் கருத்துக்களுக்கு ஏற்பவே இது குறைக்கப்பட்டது. எஞ்சிய 13% குறைப்பை இந்த அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும். 

 

எரிபொருள் விலைகள் தொடர்பில் அரசாங்கம் இவ்வாறான கொள்கைகளையே பின்பற்றி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 



ஐக்கிய மக்கள் சக்தியே முஸ்லிம் மக்களின் கலாச்சார மற்றும் மத உரிமையான தகனமா அடக்கமா என்ற பிரச்சினை எழுந்து போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. தற்போதைய அரசாங்கத்தைச் சேர்ந்த அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த உரிமைக்காக குரல் எழுப்பவில்லை.



ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே இந்த உரிமைக்காக குரல் எழுப்பிய ஒரே தேசியக் கட்சியாகும். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்கு ஜனநாயக ரீதியில் போராடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி அன்றும் இன்றும் நாளையும் என என்றுமே முன்நிற்கும். இந்த மக்கள் ஜனநாயக பலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் வாழ வேண்டும். ரணசிங்க பிரேமதாச கூட இவ்விரு நாடுகளும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்தார்.



அண்மையில், நமது நாட்டில் ஒரு இளைஞன் பலஸ்தீன மக்களின் உரிமைகளை ஆதரித்து ஸ்டிக்கர் ஒட்டியபோது, ​​பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, தடுப்புக் காவலில் வைத்திருக்கும் உத்தரவைக் கூட அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி பிறப்பித்தார்.



இந்த நாட்டு மக்களுக்கு தமது கருத்துக்களைப் பேசுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் உரிமைகள் காணப்படுகிறது. இந்த உரிமைகளை யாராலும் தடை செய்ய முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »