Our Feeds


Thursday, April 17, 2025

ShortNews

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!

 

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) சிறப்பு மத சேவைகள் நடைபெறவுள்ளன.

அந்தவகையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் (ஐஜிபி) பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் காலகட்டத்தில் அதிக மக்கள் கூடும் தேவாலயங்களைக் கண்டறிந்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸ் பிரிவுக்கு பதில் ஐஜிபி அறிவுறுத்தியுள்ளார். 

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார், சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »