Our Feeds


Sunday, April 20, 2025

ShortNews

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சிஐடியிடம் சமர்ப்பிப்பு!

\

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிக்கையை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சமர்பித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் தேவாலயங்கள்  மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களில் 260 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




 உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.


மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிக்கையை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சமர்பித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் தேவாலயங்கள்  மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களில் 260 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »