Our Feeds


Wednesday, April 23, 2025

Zameera

வத்திக்கானுக்குப் புறப்பட்டார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்


 கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார்டினல் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதாவது, காலமான புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடலுக்கு இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அவர் பயணமாகியுள்ளார்.

புனித திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »