Our Feeds


Sunday, April 27, 2025

Zameera

சிறி தலதா வழிபாட்டு நிகழ்வு நிறைவு


  

புனித தந்த தாதுவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு பார்வையிடுவதற்காக வழங்கப்பட்ட சிறி தலதா வழிபாட்டு நிகழ்வு இன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிறைவு பெற்றது.

 

 

புனித தந்த தாதுவை வழிபடும் வாய்ப்பு சுமார் 76,000 பேருக்கு இன்றும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இறுதி நாள் என்பதால் நேற்று இரவு முதல் வரிசையில் நின்ற யாத்திரிகர்களை அடையாளம் காண பொலிஸார் அவர்களுக்கு ஸ்டிக்கர்களை வழங்கியிருந்தனர்.

 

 

சிறி தலதா வழிப்பாட்டிற்காக மூன்று நுழைவாயில்களிலும் இன்று யாத்திரிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்காக உணவு தானமும் (தன்சல்) குளிர்பான தானமும் (தன்சல்) வழங்கப்பட்டது.

 

 

இன்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகு, "சிறி தலதா வழிபாட்டு நிகழ்வுக்காக பாதுகாப்பு, சுகாதாரம், அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்கிய தரப்பினருக்கும் புனித தந்த தாதுவை வழிபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

 

 

இதேவேளை, இன்று மாலை 5.30 மணிக்கு சிறி தலதா வழிபாட்டு நிகழ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து கண்டி நகரை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »