தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) ஊசிகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான விசாரணைக்கு மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை வாங்கும் போது, சுகாதார அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக ரம்புக்வெல்ல மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.