Our Feeds


Tuesday, April 29, 2025

Sri Lanka

ரனிலுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அனுப்பிய முக்கியமான SMS



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த உடனே ட்ரம்ப் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


குறித்த விடயத்தை மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த உடனே ட்ரம்ப் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார். குறித்த குறுஞ்செய்தியில், FBI குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப தயார் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் எனவும் உறுதியளித்திருந்தார்.


“இதனையடுத்து, பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடிய ட்ரம்ப், மீண்டும் என்னுடன் பேசிய போது தாக்குதல் நடத்திய குழுவினர் ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையவர்களே அன்றி வேறு யாருமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.


இருப்பினும், தாக்குதலுக்கு பின்னால் மேலும் சில முஸ்லிம் தரப்பினர் இருப்பதாக தற்போது அரசாங்கம் கூறிவருகின்றது என ரணில் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »