சிறந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். மே மாதம் 6ம் திகதி அனைவரும் எமக்கு வாக்களியுங்கள். 2024 இல் நீங்கள் அனைவரும் இணைந்து ஆரம்பித்த அந்த மாற்றத்தின் மூன்றாவது அத்தியாயம் மே மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ளது என தெமடகொட பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அங்கு தொர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ரனிலை ஜனாதிபதியாக்குவதாக யாரோ சொல்வதை கேட்டேன். அப்படி எண்ணிக்கொண்டிருப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் பல ஆண்டுகளாக ரனில் எந்தத் தேர்தல்களிலும் வெற்றிபெற வில்லை. அவசரமாக வந்து ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதியாக வேண்டும் என கூறுகிறார்.
பயப்படத் தேவையில்லை. தற்போதைய ஜனாதிபதி சகோதரர் அனுரகுமார எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு இலங்கையை ஆட்சி செய்வார். அவர்கள் சொல்வதை சொல்லிக்கொண்டே இருக்கட்டும் அதுதான் அவர்களின் வேலை.
நாட்டை மேம்படுத்தும் சரியான தலைவர்களை தேர்வு செய்வதே நமது வேலை. அதை நாம் செய்வோம். என பிரதமர் மேலும் தெரிவித்தார்.