Our Feeds


Friday, May 9, 2025

Zameera

13 ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவை


 நீண்ட விடுமுறை மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவை முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. 

கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு, கோட்டை வரையிலும் விசேட சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதேநேரம் கொழும்பு, கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை விசேட   சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்றும் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளிலும் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »