Our Feeds


Tuesday, May 27, 2025

Zameera

போதைப்பொருட்களுடன் 477 பேர் கைது


 நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (26) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 477 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 150 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 147 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 170 பேரும், கஞ்சா செடிகளுடன் 04 பேரும், போதை மாத்திரைகளுடன் 06 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 193 கிராம் 577 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 190 கிராம் 398 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 08 கிலோ 743 கிராம் 155 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 37360 கஞ்சா  செடிகளும், 108 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »