புதிய பாப்பரசரை நியமிப்பதற்கான முதலாவது வாக்கெடுப்பு, புதன்கிழமை (07) நடைபெற்றது.
கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித், மாநாட்டிற்கு முன்னதாக வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனை தெரிவிக்கும் வகையில் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வெளிட்டுள்ளது.
உரோம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் கரும்புகை வெளியிடப்பட்டு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது