பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்
கிரிபத்கொட நகரில் உள்ள அரசாங்க காணியொன்றை மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பிரதான நீதவான் காஞ்சனா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.