தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ, தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார், மேலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
அடுத்தமாதம் தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிமுறைகள் காரணமாக, அதிகாரபூர்வ பதவியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முன்பே பதவி விலக வேண்டும். அதன்படி, ஹான் டக்-சூ தனது பதவியை இராஜிநாமா செய்தார்.
இராஜிநாமா குறித்து ஹான் டக்-சூ கூறியதாவது:
எனக்கு முன்னால் இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று நான் இப்போது கையாளும் பெரிய பொறுப்பை முடிப்பது. மற்றொன்று அந்தப் பொறுப்பைக் கைவிட்டு, ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது. நான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க என்னால் முடிந்ததைச் செய்வதற்கும், எனக்கு என்ன தேவையோ அதைச் செய்வதற்கும் எனது பதவியைக் கைவிட நான் இறுதியாகத் தீர்மானித்துள்ளேன். என்று கூறினார்.
இதேவேளை ஹான் டக்-சூ,பழைய பழமைவாத கட்சியின் உறுப்பினர்.பொருளாதார நிபுணர், பன்னாட்டு உறவுகளில் வலுவான நிலைப்பாடு கொண்டவர். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.