Our Feeds


Sunday, May 18, 2025

Admin

கொழும்பின் அதிகாரம் NPP வசம்..! - மேயராக ராய் பல்தசார் பதவியேற்கும் வாய்ப்பு.



கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தற்போதைக்கு மாநகர சபைக்குத் தெரிவான 63 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.


அதன் பிரகாரம் எதிர்வரும் 02ம் திகதி பெரும்பாலும் தேசிய மக்கள் சக்தியின் விராய் பல்தசார் கொழும்பு மாநகர மேயராக பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.


சஜித்தின் பிடிவாதம்.


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிடிவாதம் காரணமாக குறித்த முயற்சியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »