ஈரானுடைய அணு நிலையங்கள் மீது இன்று அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் வெற்றியளிக்கவில்லை எனவும், செறிவூட்டப்பட்ட யுரேனியும் உள்ளிட்ட தேவையான அனைத்தும் பாதுகாக்கப்பட்டு விட்டது என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அல்-ஜஸீரா, நிவ்யோர்க் டைம்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செட்லைட் புகைப்பட தகவல்கள் பிரகாரம். அமெரிக்காவின் இன்றைய தாக்குதல்கள் ஈரானிய அணு நிலையங்களின் வாயில்கள் மீது மாத்திரமே நடத்தப்பட்டுள்ளதாக செட்லைட் காட்சிகள் விபரிக்கும் அதே வேலை, தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே செறிவூட்டப்பட்ட யுரேனியும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் தாம் பெரும் சாதணையை நிகழ்த்தி விட்டதாக அமெரிக்க அதிபர் மார் தட்டிக்கொண்ட ஈரான் அணு தயாரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.