Our Feeds


Sunday, June 8, 2025

SHAHNI RAMEES

மூவாயிரம் இராணுவ வீரர்கள் கைது!



விடுமுறைகளில் சென்று பணிக்குத் திரும்பாத

ஆயுதப்படைகளைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


பெப்ரவரி 22ஆம் திகதி முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில், முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


அதன்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 2,261 பேர் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் விடுமுறையில் சென்று திரும்பாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம் இராணுவ விதிமுறைகளை அமுல்படுத்துவதையும் ஆயுதப்படைகளுக்குள் ஒழுக்கத்தை உறுதி செய்வதையும் இந்த கைதுநடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »