Our Feeds


Wednesday, June 18, 2025

Admin

NPPக்கு ஆதரவளித்த SJB உறுப்பினரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்!


கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார கொஸ்தாவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

கொலன்னாவ நகர சபையின் தலைவர் மற்றும் பிரதித் தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்கச் செயல்படாததால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »