Our Feeds


Tuesday, July 1, 2025

Sri Lanka

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் அபராதம்!


வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.

அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் பின்வரும் தண்டனைகள் போன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிக்கையொன்றை வெளியிட்டது.

அதன்படி, உரிமையாளர்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் குறைந்தபட்சமாக 100,000 ரூபாஅபராதமும் அதிகபட்சமாக 500,000 ரூபா அல்லது 6 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் அபராதம் விதிக்கப்படும்.

தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் / நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக 500,000 ரூபா அபராதமும் அதிகபட்சமாக 5,000,000 ரூபா அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை இன் 1977 என்ற துரித எண் மூலம் பொதுமக்களை தகவல் தெரிவிக்குமாறு மேலும் வலியுறுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »