கண்டி பொது வைத்தியசாலையின் மாடி
கட்டிடத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்த ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவமானது நேற்று (12) மாலை இடம்பெற்ற நிலையில், கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹரிஸ்பட்டு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் வைத்தியசாலை கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டும் போது, அந்த நபர் கட்டடத்தின் 3ஆவது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
