Our Feeds


Tuesday, July 15, 2025

SHAHNI RAMEES

இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் மேலதிக நேர வேலைநிறுத்த போராட்டம்!



தபால் துறையில் நிலவும் கடுமையான பணிச்சூழல்

மற்றும் நிர்வாக அலுவலக ஊழியர்கள் மீதான அழுத்தங்களைக் கண்டித்து, கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (15) நள்ளிரவு முதல் நாடு முழுவதும் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது.


கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார, " தபால் துறையில் தற்போது மிகவும் கடுமையான சூழ்நிலை நிலவுகிறது. நிர்வாக அலுவலக ஊழியர்கள் கூடுதல் நேரப் பணிக்கு உள்ளாக்கப்படுவதுடன், 2016ஆம் ஆண்டு முதல் தபால் துறையில் முறையான ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்பது இந்தப் போராட்டத்தின் முக்கிய காரணம் என தெரிவித்தார். 


இதனால், நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இந்த வேலைநிறுத்தம் செயல்படுத்தப்படும்," என்றார்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி, ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »