Our Feeds


Tuesday, July 15, 2025

SHAHNI RAMEES

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை!

 


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள்

தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை உத்தரவிட்டுள்ளார்.


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிஷாந்த விக்ரமசிங்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, நிஷாந்த விக்ரமசிங்கவை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


நிஷாந்த விக்ரமசிங்க, விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »