Our Feeds


Friday, July 18, 2025

SHAHNI RAMEES

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை வயலில் விட்டுச் சென்ற தாயை தேடி பொலிஸார் விசாரணை!



குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர

பிரதேசத்தில் உள்ள வயலில் நேற்று வியாழக்கிழமை (17) பிற்பகல் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை விட்டுச் சென்ற தாயை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வயலில் உள்ள மரத்திற்கு அடியில் குழந்தை ஒன்று இருப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்க தகவல் வழங்கியுள்ளனர்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.



பின்னர் இந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.



இந்த குழந்தையின் தாய் குழந்தையை வயலில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார்,  குழந்தையின் தாயை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிரிவி கமராக்களையும் சோதனை செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


இது தொடர்பில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »