Our Feeds


Saturday, August 2, 2025

Zameera

ஜூலை மாதத்தில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை


 2025 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2 இலட்சத்து 244 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


ஜூலை மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 37,128 ஆகும்.


அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,475 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 15,556 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 12,982 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 11,059 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 10,568 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 9,117 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.



2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 13 இலட்சத்து 68 ஆயிரத்து 288 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »