கலேவெல, தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரைத் தாக்கி, கொலை செய்து, எரித்து புதைத்ததாக சந்தேகத்தின் பேரில் 26 வயது கடற்படை வீரர் ஒருவர் மகுலுகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 வருடங்களுக்கு முன்பு தனது தாய் மற்றும் தந்தையை அவர்களது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
