ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை புதிய பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய பொலிஸ் மா அதிபரான சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிடம் வழங்கினார்.
