Our Feeds


Friday, August 29, 2025

Sri Lanka

கைது செய்யப்பட்ட பாதாள உலக குற்றவாளிகளை நாளை மறுநாள் நாட்டுக்கு அழைத்து வரத்திட்டம்!


இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஐந்து பாதாள உலக குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த என்கிற பிட்டுவா, பாணதுரே நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் ஒரு நாள் தாமதமாக ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 

அவர்களை நாளை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த போதிலும் , இந்தோனேசிய தரப்பில் பல சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஒரு நாள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசியாவிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குழு மீண்டும் அழைத்து வரப்படும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »