Our Feeds


Monday, August 11, 2025

Zameera

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீடுகள் ஆரம்பம்


 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (10) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று (11) ஆரம்பமாகும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இதன்படி வினாத்தாள் திருத்தும் செயற்பாடுகள் ஓகஸ்ட் 22 முதல் 27 வரை 43 நியமிக்கப்பட்ட மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை செப்டம்பர் 20 ஆம் திகதிக்குள் பரீட்சை முடிவுகளை வெளியிட பரீட்சைத் திணைக்களம் இலக்கு வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »