முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (18) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு, மஹர பிரதம நீதவான் மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்தார்.
இவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மீதான பிணை மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 21ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
