Our Feeds


Thursday, September 4, 2025

Zameera

கொழும்பின் பல பகுதிகளில் 09 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் (06) 9 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த. தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான. மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, முல்லேரியா, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »