Our Feeds


Thursday, September 4, 2025

Zameera

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: 15 மாணவர்கள் கைது


 கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 6 மாணவிகள் மற்றும் 9 ஆண் மாணவர்களை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது.

அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் 24 முதல் 26 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகள் குழுவை சந்தேக நபர்கள் பகிடிவதை வன்கொடுமை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில்,   நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் புதன்கிழமை (03) கைது செய்யப்பட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »