தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்யும் விண்ணப்பங்கள் 2025 செப்டம்பர் 09ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் பயிலும் பாடசாலையின் அதிபர் மூலமாகவே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக, பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையதளத்தில் SCHOOL LOGIN மூலம் உள்நுழைந்து விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
