குறைந்த வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி வேலை மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரித்துள்ளது.
இருப்பினும், மோசடி செய்பவர்கள் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் தனிநபர்களை குறிவைத்து, பெரும்பாலும் போலி வேலை வாய்ப்புகளுக்கு பதிவு கட்டணம் அல்லது வைப்புத்தொகையை கோருகின்றனர் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது..
வேலை மோசடிகளை எவ்வாறு அடையாளம் கண்டு தவிர்ப்பது என்பது குறித்து மக்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக SLCERT ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது
