கொழும்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற விசேட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) விரைவில் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக அறிவித்தார்.
அமைச்சர் ரத்நாயக்க, SLTB மரியானா பள்ளத்தாக்கை விட ஆழமான நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசியல்வாதிகளே பொறுப்பு எனவும் குறிப்பிட்டார். மேலும், இலங்கையிலுள்ள SLTB பணிமனைகள் குறைபாடுகளால் நரகமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், 25 பேருந்து பணிமனைகளை நவீனப்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். SLTBயில் தற்போதுள்ள பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 750 புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாகவும், SLTB ஒரு லாபகரமான நிறுவனமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
