Our Feeds


Tuesday, September 16, 2025

Zameera

இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்த பெண் கைது


 கம்பஹா, திவுலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் நேற்று (15) திவுலப்பிட்டி பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


திவுலப்பிட்டியவிலுள்ள பாடசாலையொன்றின் அருகிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கம்பஹா,வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர் 5500 முதல் 7000 ரூபாய் வரையில் இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். 


வெளிநாட்டில் உள்ள அவரது கணவர் மூலம் இந்த சிகரெட்டுகளை குறித்த பெண் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »