Our Feeds


Sunday, September 7, 2025

Zameera

ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லது


 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லது என்று தான் நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன இன்று (7) தெரிவித்துள்ளார்.


"ஆனால் அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை. சரியான நேரம் வரும்போது அவர் பாராளுமன்றத்திற்குச் செல்வார். ஆனால் தற்போது அத்தகைய விவாதம் இல்லை. அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை," என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் கூறியுள்ளார்.


சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று தானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நடைபெற்றது.அப்போது  ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஏதேனும் ஏற்பாடு உள்ளதா?” என்று பத்திரிகையாளர்கள் ருவான் விஜேவர்தனவிடம் கேள்வி கேட்டபோதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.


ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசி பெறுவதற்காக கட்சித் தலைமையகம் இந்த தானசாலையை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »