அரச வங்கிகளின் தனியார்மயமாக்கல் திட்டம் மற்றும் பல பிரச்சினைகளுக்கு எதிராக நாளை (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வங்கி கூட்டு தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு முன்பாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக மின்சார கூட்டு தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது.ஏனெனில் அரசாங்கம் இன்னும் தனது பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்கவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.
