2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஜூலை
மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 184 பெண்கள் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 75 பெண்கள் ஐஸ் போதைப்பொருள் தொடர்பிலும், 97 பெண்கள் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பிலும், 8 பெண்கள் கஞ்சா போதைப்பொருள் தொடர்பிலும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை தலைமையகம் தெரிவிப்பு
