Our Feeds


Thursday, October 23, 2025

Zameera

மெக்சிக்கோவில் வெள்ளப்பெருக்கு – 78 பேர் உயிரிழப்பு


 மெக்சிக்கோவில் சீரற்ற  வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

 

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 சீரற்ற வானிலை   மெக்சிக்கோவில் ஐந்து மாநிலங்களை பாதித்துள்ளது,  இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும், நிவாரண முயற்சிகள் மற்றும் சேதமடைந்த கட்டிடங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மெக்சிகன் அரசாங்கம் 580 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியை அங்கீகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »