Our Feeds


Sunday, October 12, 2025

Sri Lanka

சீனாவை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!



சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவை சென்றடைந்துள்ளார். 

பீஜிங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டம், "பகிரப்பட்ட ஓர் எதிர்காலம் – பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.

பிரதமர் அமரசூரிய தனது விஜயத்தின் போது, பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளடக்கிய கொள்கை சீர்திருத்தங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்.

சமூக அபிவிருத்தி, கல்வி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பெண்கள் தலைமையிலான தொழில்முனைவோர் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »