'எனக்கு வரிகள் மிகவும் பிடிக்கும். மிக அழகான வார்த்தை. வரி விதிப்பதால் நாங்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகியுள்ளோம்' என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில் ,
எனக்கு வரிகள் மிகவும் பிடிக்கும். மிக அழகான வார்த்தை. வரி விதிப்பதால் நாம் மிகப்பெரிய பணக்காரர்களாகி வருகிறோம். நாம் டிரில்லியன் கணக்கான டொலர்களை ஈட்டினோம்.
இந்த வரி விதிக்கும் முடிவை நாம் கைவிட்டால் நம்மிடம் இருக்கும் பணம் ஒருபோதும் இருக்காது. மற்ற நாடுகள் பல ஆண்டுகளாக நம்மைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்போது நாம் அவர்களை நியாயமாக நடத்துகிறோம்.
நான் பதவியேற்றதும் கையெழுத்திட்ட முதல் நிர்வாக உத்தரவுகளில் ஒன்று தகுதியின் கொள்கையை மீட்டெடுப்பது. அதுதான் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பது ஆகும். வரிவிதிப்பு என்ற வார்த்தையை நான் விரும்புகிறேன்.
வரிவிதிப்பு குறித்து உயர் நீதிமன்றத்தின் முன் ஒரு பெரிய வழக்கு உள்ளது, ஆனால் மற்ற நாடுகள் நமக்குச் செய்தது இதுதான் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. வரிவிதிப்பால் வரும் பணம் நாம் இதுவரை பார்த்திராத ஒன்று. அது நிறைய போர்க்கப்பல்களை வாங்க போதுமானது. இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.
