Our Feeds


Tuesday, October 28, 2025

SHAHNI RAMEES

பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும்!

 


மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய

மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த காற்று வீசும் என 'அம்பர்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை புதன்கிழமை (29) காலை 11.00 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.


வங்காள விரிகுடாவில் இலங்கையின் வடகிழக்கில் உருவாகியுள்ள "மொந்தா" சூறாவளி காரணமாக மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில நேரங்களில் மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதன்படி, பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »