பாடசாலை சிறுவர்கள் மத்தியில் புகைபிடித்தல் பழக்கம் அதிகரித்துள்ளது என்று பேராதனை போதனா மருத்துவமனையின் சுவாச நோய்களுக்கான நிபுணர் டொக்டர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.
பல பாடசாலை சிறுவர்கள் 14 அல்லது 15 வயதிற்குள் சிகரெட்டை முயற்சிக்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சுவாச நோய்களுக்கான நிபுணர் டொக்டர் துமிந்த யசரத்ன, புகைபிடித்தல் நுரையீரல் தொடர்பான நோய்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் என்று தெரிவித்தார்
