Our Feeds


Sunday, November 9, 2025

Zameera

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை


 நாட்டிலுள்ள தாதியர் கல்லூரிகளில் தாதியர் விரிவுரையாளர்கள் பற்றாக்குறையிருப்பதால், உடனடியாக விரிவுரையாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தாதியர் கல்லூரிகளில் 395 அங்கீகரிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் காணப்படவேண்டிய நிலையில், தற்போது சுமார் 220 பேர் மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மேலும் 175 தாதியர் விரிவுரையாளர்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் தாதியர் கல்லூரி அதிபர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வெற்றிடத்திற்கு விரிவுரையாளர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யவும், அடுத்த 2 மாதங்களுக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கு தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு நடத்துமாறும் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு, இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »