Our Feeds


Thursday, November 27, 2025

Sri Lanka

ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!


அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (27) காலை 9.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளார்.



இன்று பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.



இன்று நண்பகலுக்குள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், உரிய துறைகளைச் சார்ந்த அமைச்சர்களும் கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »