Our Feeds


Thursday, November 27, 2025

Sri Lanka

சனிக்கிழமையும் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது - புதிய திகதிகள் அறிவிப்பு!


எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கமைய, இன்று(27), நாளை(28) மற்றும் நாளை மறுதினம்(29) ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



இப்பரீட்சைகளுக்கான மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் 09 ஆகிய தினங்கள் வழங்கப்பட்டுள்ளன.



இன்று (27) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை - டிசம்பர் 07 ஆம் திகதியும், நாளை (28) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை - டிசம்பர் 08 ஆம் திகதியும், சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை - டிசம்பர் 09 ஆம் திகதியும் நடைபெறும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »