Our Feeds


Wednesday, November 19, 2025

Zameera

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கலந்துரையாடல்


 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். 


ஜனாதிபதி செயலகத்திலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 


தமிழரசுக் கட்சி எம்.பிக்களின் கோரிக்கையின் பேரிலேயே இச் சிறப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 


மாகாண சபைத் தேர்தல்கள், திருகோணமலை சம்பவம், வடக்கு கிழக்கில் எழுந்துள்ள பிற நெருக்கடிகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை இக் கலந்துரையாடலின்போது விவாதிக்கப்பட்டுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »